அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் 85 குடும்பங்களை சேர்ந்த 320 பேர் தற்காலிக முகாம்களில் தங்கவைப்பு- படங்கள்

மன்னார் மாவட்டதில் கடந்த ஒரு வர காலமாக பெய்துவரும் கடும் மழை காரணமாக இதுவரை 85 குடும்பங்களை சேர்ந்த 320 பேர் தற்காலிகமாக இடம் பெயர்ந்து முகாம்களில் தங்கவைக்கப்படுள்ளனர்

மன்னார் மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக மழை நீர்வடிந்து செல்ல முடியாத நிலையில் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் புகுந்துள்ளது குறிப்பாக ஜீவபுரம் ஜிம்றோன் நகர் சாந்திபுரம் எமில் நகர் சாவற்கட்டு எழுத்தூர் போன்ற பகுதிகளில் மழை நீர் ஆனது முழுவதுமாக நிரம்பியுள்ளாதன் காரணமாக மக்கள் தங்கள் வதிவிடங்களை விட்டு வெளியேறி  மன்னார் பிரதேச செயலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இடம் பெயர்ந்துள்ள மக்களுக்கு தேவையான அடிப்படைவசதிகள் உணவு குடிநீர் என்பன மாவட்ட செயலகம் மற்றும் மாவட்ட அனர்த்தமுகாமைத்துவ பிரிவு பிரதேச செயலகத்தின் ஊடாக ஒழுங்கு செய்யப்பட்டு வழங்கப்பட்டுவருகின்றது.

அதே நேரத்தில் இடம் பெயர்ந்த குடும்பங்ளில் அதிகளவானவர்கள் சிறுபிள்ளைகளை கொண்ட குடும்பத்தினர் என்பதுடன் தொடர்சியாக மழை பெய்யும் பட்சத்தில் தாழ் நில கிராமங்களில் வசிக்கு எனைய மக்களும் இடம் பெயர வேண்டிய சூழ்னிலை உருவாகும் என்பது குறிப்பிடதக்கது.








மன்னார் 85 குடும்பங்களை சேர்ந்த 320 பேர் தற்காலிக முகாம்களில் தங்கவைப்பு- படங்கள் Reviewed by Author on October 26, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.