அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் இடம் பெற்ற வீதிபாதுகாப்பு விழிர்ப்புணர்வு நடை பவனி-படங்கள்

வட மாகாண ஆளுநரின் வழிநடத்தலில் ஆரம்பமான வீதிப்பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் 11/10/2019 வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் விழிர்ப்புணர்வு   நடை பவனி இடம் பெற்றது.

மாந்தை மேற்கு பிரதேச செயலக உதவி பிரதேசச் செயலாளர் எஸ்.ஜெசிந்தன்   தலைமையில் மன்னார் மாவட்டச் செயலக்ததில் ஆரம்பமான குறித்த விழிர்ப்புணர்வு நடை பவணி மன்னார் பஸார் பகுதியூடாக சென்று மீண்டும் மன்னார் மாவட்டச் செயலகத்தை வந்தடைந்தது.

வடமாகாணத்தில் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் நடைபெறும் இந்த வீதி பாதுகாப்பு வாரத்தின் போது வடக்கு முழுவதும் பல்வேறு மட்டங்களில் மக்கள் மத்தியில் விழிர்ப்புணர்வினை ஏற்படுத்தும்  வகையில் பல்வேறு விழிப்புணர்வு செயற்பாடுகள்  இடம் பெற்று வருகின்றது.

இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் மக்கள் மத்தியில் வீதி பாதுகாப்பு தொடர்பாக விழிர்ப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் குறித்த நடை பவணி  இடம் பெற்றது.

மன்னார் மாவட்ட செயலக அதிகாரிகள் பணியாளர்கள் உற்பட திணைக்கள பணியாளர்களும் குறித்த விழிர்ப்புணர்வு நடை பவணியில் கலந்து கொண்டனர்.நடை பவணியை தொடர்ந்து மாவட்டச் செயலகத்தில் வைத்து வீதிபாதுகாப்பு உறுதி மொழியையும் அதிகாரிகள் வழங்கினர்.

கடந்த 7ஆம் திகதி ஆரம்பமான வடமாகாண வீதிபாதுகாப்பு வாரமானது எதிர் வரும் 13ஆம் திகதி வரை  நடை பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.









மன்னாரில் இடம் பெற்ற வீதிபாதுகாப்பு விழிர்ப்புணர்வு நடை பவனி-படங்கள் Reviewed by Author on October 12, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.