அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் இதுவரை 21 தேர்தல் முறைப்பாடுகள் -படம்

ஐனாதிபதி தேர்தலை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தில் தேர்தல் முறைப்பாடாக இதுவரை 21 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மன்னார் தேர்தல்கள் உதவி தெரிவத்தாட்சி அலுவலகரும் முறைப்பாட்டு நிலைய அதிகாரியுமான எல்.ஜெ.றொகான் குரூஸ் இவ்வாறு தெரிவித்தார்.


-எதிர்வரும் நடைபெற இருக்கும் ஐனாதிபதி தேர்தலை எதிர்நோக்கிக்
கொண்டிருக்கும் இவ்வேளையில்   மன்னார் மாவட்டத்தில் இதுவரை 21 தேர்தல் சம்பந்தமான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள்
முறைப்பாட்டு நிலையம் தெரிவிக்கின்றது.

-ஞாயிற்றுக் கிழமை (10.11.2019) வரை 18 முறைப்பாடுகளாக இருந்தவை
திங்கள் கிழமை (11.11.2019) அது 21 ஆக உயர்ந்துள்ளது.

-இவ் முறைப்பாடுகளில் ஒன்றான நேற்று  ஞாயிறு (10.11.2019) இரவு
இடம்பெற்ற தேர்தல் அசம்பாவதத்pல் மன்னார் தோட்வெளி யோசப்நகர் கிராமத்தில் ஸ்ரீலங்கா பொதுஐன பெரமுன வட்டாரக் காரியாலய வளாகத்தில் உட்புகுந்த ஒரு கோஷ்டினர் அவ் அலுவலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஐனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய ராஐபக்சவின் முகத்தில் புதிய ஐனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித்தின் புகைப்படம் கொண்ட விளம்பரத்தை ஒட்டியிருந்ததாகவும்

கட்சி அலுவலக வளாகத்தை சேதப்படுத்தப்பட்டதுடன் வளாகத்துக்குள்
காட்சிப்படுத்தப்பட்ட வேட்பாளரின் விளம்பரங்களை
சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மன்னார் பொலிசில் முறையீடு
செய்யப்பட்டதுடன் தேர்தல் திணைக்களத்திலும் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதுவிடயமாக மன்னார் பொலிசார் விசாரனையில் ஈடுபட்டுள்ளனர்.
(படம்) தோட்டவெளி யோசப்நகரில் ஸ்ரீலங்கா பொதுஐன பெரமுன கட்சி அலுவலகம் சேதப்படுத்தப்பட்டவை




மன்னாரில் இதுவரை 21 தேர்தல் முறைப்பாடுகள் -படம் Reviewed by Author on November 12, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.