அண்மைய செய்திகள்

recent
-

பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்ஸ தமிழ் மக்களுக்கு எவ்விதமான பிழைகளையும் செய்ய மாட்டார்-மன்னார் மாவட்ட இணைப்பாளர் எஸ்.செல்வக்குமரன் டிலான்-படம்

சிறிலங்கா பொது ஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்ஸ தமிழ் மக்களுக்கு எவ்விதமான பிழைகளையும் செய்ய மாட்டார் உன அக்கட்சியின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் எஸ்.செல்வக்குமரன் டிலான் தெரிவித்துள்ளார்.

இவ்விடையம் தொடர்பாக அவர் இன்று புதன் கிழமை 13/11/2019 ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,,,

சிறிலங்கா பொது ஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்ஸ அவர்கள் தொடர்பில் ஒரு சில ஊடகங்கள் தவரான முறையிலே தமிழர்களின் நினை வேந்தலை தடுத்து நிறுத்துவதாக தவரான செய்தியை வெளியிட்டுள்ளது.

குறித்த செய்தியானது உண்மைக்கு புறம்பானது.குறித்த செய்தியை தாம் வண்மையாக கண்டிக்கின்றோம்.ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்ஸ அவர்கள் தமிழர்களின் நினைவேந்தலை அனுஸ்ரிக்க விடமாட்டேன் என ஒரு சில ஊடகங்களில் உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளியாகியுள்ளது.
குறித்த பிழையான அவதூறு ஏற்படுத்துகின்ற செய்தியை வெளியிட்ட ஊடகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறிலங்கா பொது ஜன பெரமுன கட்சி நீதிமன்றத்தை நாடியுள்ளது.

எதிர் வரும் 16 ஆம் திகதி இடம் பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலினை உலக நாடுகள் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் சில ஊடகங்கள் எமக்கு எதிராக தவரான சில பரப்புரைகளை வெளியிட்டு வருகின்றது.

குறித்த ஊடகங்களுக்கு பின்னனியில் அரசியல் தலையீடுகள் இருக்கின்ற காரணத்தினால் தமிழ் மக்கள் மத்தியில் தவரான ஒரு கருத்தை கொண்டு செல்ல முயற்சிக்கின்றனர்.

-தேர்தல் காலங்களில் ஊடகங்களை நம்பி பல பாமர மக்கள் ஊடகங்களில் வெளிவருகின்ற செய்திகளை அவதானித்து வருகின்றனர்.பொது ஜன பெரமுன கட்சியின் வெற்றியை பொறுத்துக்கொள்ள முடியாத ஒரு சில ஊடகங்கள் உண்மைக்கு புறம்பாக தமிழர்களின் பாரம்பரிய நினை வேந்தலை நடத்த விடமாட்டோம் என்கின்ற பொய்யான செய்தியை தமிழ் மக்கள் மத்தியில் கொண்டு சென்றுள்ளனர்.

-குறித்த செய்தியை நாங்கள் வண்மையாக கண்டிக்கின்றோம். சிறிலங்கா பொது ஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்ஸ தமிழ் மக்களுக்கு எவ்விதமான பிழைகளையும் செய்ய மாட்டார் என்கின்ற உறுதியாக தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

மேலும் செய்திகளை சரியான முறையில் வெளியிட்டு வரும் அனைத்து ஊடகங்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.என அவர் மேலும் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்ஸ தமிழ் மக்களுக்கு எவ்விதமான பிழைகளையும் செய்ய மாட்டார்-மன்னார் மாவட்ட இணைப்பாளர் எஸ்.செல்வக்குமரன் டிலான்-படம் Reviewed by Author on November 13, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.