அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நகர சபையினால் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு ஆரம்பித்து வைப்பு.படம்

மன்னார் நகர சபையின் 2019 ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டில் மன்னார் நகர சபை பிரிவில் மரம் நாட்டும் நிகழ்வு இன்றைய தினம் வியாழக்கிழமை (21) வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப் பட்டிருக்கின்றது.

மன்னார் நகர சபை பிரிவுக்குட்பட்ட பகுதியில் 250 மரக்கன்றுகள் நாட்டி வைக்கும் வகையில் இந்த நிகழ்வு இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப் பட்டிருக்கின்றது.

 மன்னார் தலைமன்னார் பிரதான வீதி மன்னார் பொது மயானத்தில் இன்று வியாழக்கிழமை மாலை குறித்த ஆரம்ப நிகழ்வு இடம் பெற்று இருக்கின்றது.

 மன்னார் நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரன் டேவிட்சன் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் மன்னார் நகர சபையின் செயலாளர் ,நகர சபை உபதலைவர், நகரசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நாட்டி வைத்தனர்.

தொடர்ந்து மன்னார் நகர சபைக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் குறித்த நிகழ்வு இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






மன்னார் நகர சபையினால் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு ஆரம்பித்து வைப்பு.படம் Reviewed by Author on November 21, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.