அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மனித உரிமை ஆணைக்குழுவின் விசேட நடமாடும் சேவை-படங்கள்

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் மன்னார் உப காரியாலயத்தின் ஏற்பாட்டில் மன்னார்  முசலி பிரதேச சபைகுட்பட்ட முள்ளிக்குளம் மலங்காடு பொது மண்டபம் மற்றும் மாந்தை மேற்கு பிரதேச சபைகுட்பட்ட இலுப்பைக்கடவை பகுதிகளில் விசேட நடமாடும் சேவையானது நாளை மற்றும் நாளை மறு தினம் இடம் பெறவுள்ளது

மக்களின் காணி ,அடிப்படை உரிமை ,சட்ட உதவி போன்ற விடையங்கள் தொடர்பாக விசேட உதவிகளை வழங்கும் முகமாக குறித்த நடாமாடும் சேவையானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

 குறித்த நடமாடும் சேவைக்காக மாவட்ட ரீதியாகவும் மாகணரீதியாகவும் சேவை வழங்கும் திணைக்களங்கள் மற்றும் ஆணையாளர்கள் பிரதேச செயலாளர்கள் உட்பட பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் கலந்து கொள்ளவிருப்பதாகவும்

குறிப்பாக 15 திணைக்களங்களை சேர்ந்த அதிகாரிகள் நேரடியாக கலந்து கொள்ளவிருப்பதனால் தேவை உடைய பொது மக்கள் குறித்த நடமாடும் சேவையில் கலந்து கொண்டு பயனடையுமாறு இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரனை அதிகாரி சட்டத்தரணி வசந்தராஜ தெரிவித்துள்ளார்.

குறித்த நடமாடும் சேவையானது 21 திகதி முள்ளிக்குளத்திலும் 22 திகதி இலுப்பைகடவை கலாச்சார மண்டபத்திலும் காலை 9.30 தொடக்கம் மாலை 3.30 வரையில் இடம் பெறவுள்ளமை குறிப்பிடதக்கது.

மன்னார் மனித உரிமை ஆணைக்குழுவின் விசேட நடமாடும் சேவை-படங்கள் Reviewed by Author on November 20, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.