அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் பொலிஸாரினால் 125 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் கையளிப்பு-படம்

பாடசாலை மாணவர்களின் கல்வி வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் வகையில் பொலிஸ் மா அதிபரின் வேண்டு கோளுக்கு அமைவாக மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட்ட 125 மாணவர்களுக்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(31) கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

மன்னார் தலைமையக பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில்,பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.கிருஸ்சாந்தன் தலைமையில் மன்னார் நகர சபை மண்டபத்தில் காலை 9.30 மணியளவில் இடம் பெற்றது.

குறித்த நிகழ்விற்கு விருந்தினர்களாக மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன்,உதவி பொலிஸ் அத்தியட்சகர் கஸ்தூரி ஆராட்சி ஆயியோர் கலந்து கொண்டதோடு,மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

-இதன் போது மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட்ட 125 மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டது.









மன்னாரில் பொலிஸாரினால் 125 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் கையளிப்பு-படம் Reviewed by Author on December 31, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.