அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் வட்டுப்பித்தான் மடு கிராமம் வெள்ள நீரில் மூழ்கியது-30 குடும்பங்களைச் சேர்ந்த 120 நபர்கள்கள் இடம் பெயர்வு-

தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மன்னார் மாவட்டத்தில் மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட வட்டுப்பித்தான் மடு கிராம மக்கள் பாதீப்படைந்துள்ளனர்.

-வட்டுப்பித்தான் மடு கிராமம் வெள்ள நீரில் மூழ்கியுள்ள நிலையில் குறித்த கிராமத்தைச் சேர்ந்த 30 குடும்பங்களைச் சேர்ந்த 120 நபர்கள் இடம் பெயர்ந்து இன்று வெள்ளிக்கிழமை வட்டுப்பித்தான் மடு கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

-குறித்த மக்களுக்கான உணவு மற்றும் ஏனைய வசதிகளை மேற்கொள்ள மன்னார் மாவட்ட அனார்த்த முகாமைத்துவ பிரிவு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-மேலும் மன்னார் மாவட்டத்தில் 5 பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலும் வெள்ள பாதீப்புக்கள் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது வரை 168 பேர் நலன் புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக  மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






மன்னார் வட்டுப்பித்தான் மடு கிராமம் வெள்ள நீரில் மூழ்கியது-30 குடும்பங்களைச் சேர்ந்த 120 நபர்கள்கள் இடம் பெயர்வு- Reviewed by Author on December 06, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.