அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் 'மார்டப்' நிறுவனத்தால் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் அனுஷ்டிப்பு.

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமாகிய நேற்று (03.12.2019) 'மார்டப்'
நிறுவன குடும்பம் ஒன்றினைந்து மன்னார் நகர சபை மண்டபத்தில் இவ் நினைவு தினத்தை கொண்டாடினர்.

இவ் தினத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்கள் கலைத்திறன்களை வெளிப்படுத்தும் ஒரு நிகழ்வாகவும் காணப்பட்டது.

இவ் நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு
இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, சிறப்பு விருந்தினராக மன்னார் மாவட்டசமூகசேவை அலுவலர் திருமதி.ஜெ.மரியபிள்ளை, யாழ்ப்பாணம் மாகாண ஆலோசகர் அருட்சகோதரி ஜோப்பின் மேரி (தி.கு), மன்னார் வாழ்வுதயம் இயக்குனர் அருட்பணி.அன்ரன் இவர்களுடன்

கௌரவ விருந்தினர்களாக மன்னார் மெதடிஸ்ற் ஆலயம் போதகர் அருட்பணி
நித்திய ஜீவன், மாற்றுத்திறனாளிகள் சுயஉதவி அமைப்பு அமைப்பாளர்
கு.பெனில்டஸ்,மன்னார் விழுதுகள் விருட்சமாகின்றது நிறுவனத் தலைவர்
அல்பிரட் அன்ரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இவ் நிகழ்வில் விஷேடமாக மொனராகலை மாவட்டத்திலிருந்து 31 மாற்றாற்றல்திறனாளிகளும் கலந்துகொண்டது சிறப்பு அம்சமாக காணப்பட்டது. கலந்துகொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அன்பளிப்புக்களும் வழங்கி கெரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் 'மார்டப்' நிறுவனத்தால் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் அனுஷ்டிப்பு. Reviewed by Author on December 03, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.