அண்மைய செய்திகள்

recent
-

வெள்ளாங்குளம் சேவா கிராம மக்களுக்கு மெசிடோவினால் நிவாரண பொருட்கள் கையளிப்பு-படங்கள்

மன்னார் மாவட்டத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட கிராமங்களில் ஒன்றான வெள்ளாங்குளம் சேவா கிராமத்தில் வெள்ளம் மற்றும் வரட்சியினால் பாதிக்கப்பட்ட ஐம்பது குடும்பங்களுக்கான நிவாரண பொருட்கள் நேற்று மாலை 5.00 மணியளவில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் மெசிடோவின் ஏற்பாட்டில் அதன் குழு தலைவர் ஜாட்சன் பிகிறாடோ தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.

கடந்த 2012 ஆண்டு யுத்ததால் பாதிக்கப்பட்ட மக்கள் விதவைகள் மாற்றாறல் உடையவர்கள் புணர்வாழ்வழிக்கப்பட்ட போராளிகளை உள்ளடக்கி விசேடமாக உருவாக்கப்பட்ட குறித்த கிராமத்தில்
யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்த நிலையிலும் தற்போது வரை அடிப்படை வசதி இன்றி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

அதன் அடிப்படையில் அதிகம் தேவையுடைய மக்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான முதல் கட்ட நிவாரண பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கையளிக்கப்பட்டது.

குறித்த நிவாரண பொருட்கள் கையளிக்கும் நிகழ்வில் சட்டத்தரணி புராதனி மற்றும் மெசிடோ நிறுவன ஊழியர்கள் உட்பட பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.










வெள்ளாங்குளம் சேவா கிராம மக்களுக்கு மெசிடோவினால் நிவாரண பொருட்கள் கையளிப்பு-படங்கள் Reviewed by Author on January 23, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.