அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் சுதந்திர தின நிகழ்வு ஏற்பாடு.

எதிர்வரும் சுதந்திர தினத்தை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தில் மாவட்ட
செயலகத்தால் மேற்கொள்ளப்பட இருக்கும் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள்
சம்பந்தமான கூட்டம் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ்
தலைமையில் வியாழக் கிழமை (30.01.2020) மன்னார் மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.

இக் கூட்டத்தில் மன்னார் மாவட்ட செயலக மேலதிக செயலாளர் எஸ்.குணபாலன்,ஐந்து பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலக முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர தினம் அன்று மாவட்ட செயலகத்தில்
காலை 8 மணிக்கு தேசியக் கீதத்துடன் சுதந்திரக் கொடி ஏற்றி வைக்கப்படும்.

இதைத் தொடர்ந்து நான்கு மதத் தலைவர்களின் ஆசீ உரைகள் நடைபெறும்.

இதன் பின் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்ராஸ் சுதந்திர தினம் தொடர்பான உரை நிகழ்த்துவார்.

அன்றையத் தினம் சகல மாவட்ட செயலக அலுவலர்களும் சீறுடையுடன் இவ் நிகழ்வில் கட்டாயம் பங்குப்பற்ற வேண்டும் எனவும் வலிறுத்தப்பட்டுள்ளது.

இதன்பின் மரம் நாட்டு விழாவும் சிரமதானமும் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டதுடன்

எல்லா கிராம அலுவலகப் பிரிவுகளிலும் கிராம மக்களை ஒன்றுக் கூட்டி
மரக்கன்றுகளுக்கு என ஒதுக்கப்பட்ட நிதியில் மரக்கன்றுகளை கொள்முதல்
செய்து குறைந்தது  வீடுகளில் ஒரு மரக்கன்றுகளாவது நாட்டப்பட வேண்டும்
என்றும் இது விடயமாக சகல கிராம அலுவலகர்களுக்கும் பிரதேச செயலாளர்கள் அறிவுறுத்த வேண்டும் எனவும் அரசாங்க அதிபரால் வலியுறுத்தப்பட்டது.


மன்னாரில் சுதந்திர தின நிகழ்வு ஏற்பாடு. Reviewed by Author on January 31, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.