அண்மைய செய்திகள்

recent
-

கொரோனாவால் திணறும் நாடுகள்...ஒரே நாளில் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் பலியானோர் 2,468 -

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் 2,468 பேர் மரணமடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பானது உலகின் 198 நாடுகள் மற்றும் பிராந்தியன்ஹ்க்களில் வியாபித்துள்ளது.

உலகம் முழுவதும் இதுவரை 5 லட்சத்து 94 ஆயிரத்து 199 பேர்கள் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இலகாகியுள்ளனர்.
இதுவரை உலகமெங்கும் கொரோனாவால் 27 ஆயிரத்து 231 பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.
சீனாவை அடுத்து கொரோனா வைரஸ் பாதிப்பானது ஐரோப்பிய நாடுகளை புரட்டிப்போட்டுள்ளது.


இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் 919 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 134 ஆக அதிகரித்துள்ளது.
இத்தாலியை தொடர்ந்து பல நாடுகளில் நேற்று நூற்றுக்கணக்கானவர்கள் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
ஸ்பெயின் நாட்டில் 65 ஆயிரத்து 719 பேர்கள் கொரோனா பாதிப்புக்கு இலகாகியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சிகிச்சை பலனின்றி 773 பேர் உயிரிழந்தனர். இதனால் அங்கு பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 138 ஆக உயர்ந்துள்ளது.

பிரான்ஸ் நாட்டிலும் 32 ஆயிரத்து 964 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அந்நாட்டில் சிகிச்சை பலனின்றி 299 பேர் பலியாகினர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்து 995 ஆக அதிகரித்துள்ளது.
பிரித்தானியாவில் கொரோனா பாதிப்புக்கு 14 ஆயிரத்து 543 பேர் இலக்காகியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 181 பேர் உயிரிழந்தனர். இதுவரை பலியானோர் எண்ணிக்கை 759 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே ஐரோப்பிய நாடுகளை விட அமெரிக்காவில் தற்போது வேகமாக பரவி வரும் கொரோனாவுக்கு 102,325 பேர் இலக்காகியுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அமெரிக்காவில் 296 பேர் பலியாகினர். இதனால் அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 591 என அதிகரித்துள்ளது.

கொரோனாவால் திணறும் நாடுகள்...ஒரே நாளில் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் பலியானோர் 2,468 - Reviewed by Author on March 28, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.