அண்மைய செய்திகள்

recent
-

பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்த பின்னர் தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஏமாற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டால் அவர்களுக்கு எதிராக-விடுதலைபுலிகளின் முன்னாள் சிறப்பு தளபதி அச்சுதன்.

தலைவர் காட்டித் தந்த அரசியல் என்றால் தமிழ் தேசியக்கூட்டமைப்பு எனவே தமிழ் மக்களாகிய நீங்கள் இந்த முறை தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு வாக்களியுங்கள் என விடுதலைபுலிகளின் முன்னாள் சிறப்பு தளபதி அச்சுதன் தெரிவித்தார்.

மன்னாரில் 18-03-2020 புதன் கிழமை மதியம் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

தலைவரினால் வளர்க்கப்பட்ட நாங்கள் உற்பட தலைவரின் கட்டமைப்பை விட்டு யாருமே விலக முடியாது. தமிழ் தேசியக்கூட்டமைப்பு என்பது ஒவ்வொரு தமிழனுக்குமான உரித்து.

-தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் எங்களுக்கு வேண்டப்படாதவனும்,எங்களை விற்று பிழைக்கின்ற கூட்டங்களும் இருக்கின்றது.
எனவே தமிழ் மக்களாகிய நீங்கள் இந்த முறை தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு வாக்களியுங்கள். தலைவர் காட்டித்தந்த அரசியல் என்றால் தமிழ் தேசியக்கூட்டமைப்பு.

வாழ்வாதாரம்  என்றால் வர்த்தகம்,விவசாயம்,கடற்தொழில்.

-நான்கு மதமும் சேர்ந்தே இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.ஆனால் இந்த மூன்று விடையங்களுக்குமாக கட்டமைப்பை தமிழ் தேசியக்கூட்டமைப்பு சீரமைத்து தரவில்லை என்றால் நாங்கள் அவர்களுக்கு எதிராக போராடியே ஆக வேண்டும்.

-தமிழ் தேசியக்கூட்டமைப்பான எமது வீட்டை நாங்கள் உடைத்தோமாக இருந்தால் அந்த வீட்டிற்கு யாருமே உரிமை கோர முடியாது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய அனைவரிடமும் கூறினேன்.தமிழ் தேசியக்கூட்டமைப்பை விட்டு செல்வது பிழை. தலைவரின் கட்டமைப்பை அனைவரும் சேர்ந்து வழி நடத்துங்கள்.

எல்லோறும் அண்ணனின் தியாகத்தையும்,எங்களின் தியாகத்தையும் சொல்லி கதைக்கின்றார்களோ தவிர அண்ணனின் வான்முறை படி எங்களை வாழ்வதற்கோ அல்லது எதற்கும் விடுகின்றார்கள் இல்லை.ஒவ்வொரு தமிழர்களினதும் உரிமை தமிழ் தேசியக்கூட்டமைப்பு.

தமிழர்கள் அனைவரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கே வாக்களிக்க வேண்டும்.

-இவர்கள் இந்த முறையும் எங்களை ஏமாற்றுபவர்களாக இருந்தால் நாங்கள் இவர்களுக்கு எதிராக போரிடுவோம்.மேலும் மன்னார் மக்கள் தொடர்பில் தலைவர் ஒரு விடையத்தை சொன்னார்.

ஆனால் அவர் கூறியது அப்போது எனக்கு தெரியவில்லை.வன்னியில் உள்ள மக்களின் பசியை போக்க பொருட்களை கொண்டு வந்த எத்தனையோ ஆண்கள் கொல்லப்பட்டனர்.அவர்களுடைய மனைவி விதவையாக உள்ளனர்.

அவர்களுக்கு உரிய வாழ்வாதாரம் இல்லை.எனவே தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு அரசியல் கட்டமைப்பு உள்ளது.வாழ்வாதாரத்திற்கபன கட்டமைப்பு இல்லை அதனை ஏற்படுத்த வேண்டும்.

மதக் கட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.இல்லை பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்த பின்னர் தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஏமாற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டால் நான் அவர்களுக்கு எதிராக முன்னுக்கு நிற்பேன்.என அவர் மேலும் தெரிவித்தார்.

பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்த பின்னர் தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஏமாற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டால் அவர்களுக்கு எதிராக-விடுதலைபுலிகளின் முன்னாள் சிறப்பு தளபதி அச்சுதன். Reviewed by Author on March 19, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.