அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் ஆயரிடம் ஆசி பெற்ற 'தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின்' வேட்பாளர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன்.

வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தலைமையிலான 'தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின்' வன்னி மாவட்ட தேர்தல் தொகுதியின் மன்னார் மாவட்ட வேட்பாளராக போட்டியிடும் வட மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் வைத்திய கலா நிதி ஞானசீலன் குணசீலன் 17-03-2020 செவ்வாய்க்கிழமை காலை மன்னார் ஆயர் இல்லத்திற்குச் சென்று ஆசி பெற்றார்.

வட மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஞானசீலன் குணசீலன் செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னார் ஆயர் இல்லத்திற்குச் சென்று மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகையை சந்தித்து கலந்துரையாடியதோடு,ஆசி பெற்றார்.

எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தலைமையிலான 'தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின்' வன்னி மாவட்ட தேர்தல் தொகுதியில் வட மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஞானசீலன் குணசீலன் போட்டியிடவுள்ள நிலையிலே மன்னார் மறைமாவட்ட ஆயரை சந்தித்து ஆசி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் ஆயரிடம் ஆசி பெற்ற 'தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின்' வேட்பாளர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன். Reviewed by Author on March 18, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.