அண்மைய செய்திகள்

recent
-

இந்திய பாஸ்போர்ட் மூலம் சவுதி அரேபியாவுக்கு சென்ற வங்கதேசி

சவுதி அரேபியாவில் முதலாளியின் அச்சுறுத்தலுக்கு ஆளான நபர் அவசர இந்திய பாஸ்போர்ட் மூலம் பெங்களூருக்கு திரும்பிய நிலையில், அவர் வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக இடம்பெயர்ந்தவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

2014ம் ஆண்டு மேற்கு வங்காளம் வழியாக இந்தியாவுக்குள் வந்த இவர், போலியான ஆவணங்களைக் காட்டி இந்திய பாஸ்போர்ட் பெற்றதாகக் கூறப்படுகின்றது. இதன் மூலம், கடந்த ஆண்டு சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்ற இவர் வேலை வழங்கப்பட்டவரால் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்.
இவரின் இந்திய பாஸ்போர்ட்டை பறித்துக்கொண்டு ஓர் அறையில் அடைத்து வைத்திருந்த நிலையில், அங்கிருந்து தப்பி இந்திய தூதரகத்தின் உதவியை நாடியிருக்கிறார். அதைத் தொடர்ந்து இந்தியா திரும்பிய இவர் ஒரு வங்கதேசி என விசாரணையின் மூலம் தற்போது தெரிய வந்துள்ளது.

இந்திய பாஸ்போர்ட் மூலம் சவுதி அரேபியாவுக்கு சென்ற வங்கதேசி Reviewed by Author on March 07, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.