அண்மைய செய்திகள்

recent
-

-மன்னார் மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட 300 உதைபந்தாட்ட வீரர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு





நாட்டில் ஏற்பட்டுள்ளா 'கொரோனா' வைரஸ் தாக்கம் காரணமாக பாதீக்கப்பட்ட உதை பந்தாட்ட வீரர்களின் நலனை கருத்தில் கொண்டு உலக உதைபந்தாட்ட சம்மேளனம் இலங்கை உதை பந்தாட்ட சம்மேளனத்திற்கு வழங்கிய நிதி உதவியின் கீழ் மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 300 உதை பந்தாட்ட வீரர்களுக்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மன்னாரில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை உதை பந்தாட்ட சம்மேளனம் மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட லீக்கிற்கு சுமார் 3 இலட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்திருந்தனர்.

இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் 33 உதைபந்தாட்ட கழகங்களை சேர்ந்த 300 உதைபந்தாட்ட வீரர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் மன்னார் நகர சபை மண்டபத்தில் உலர் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது.

இலங்கை உதை பந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவரும், மன்னார் மாவட்ட உதை பந்தாட் லீக்கின் தலைவருமான ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம் பெற்றது.

இதன் போது தெரிவு செய்யப்பட்ட உதைபந்தாட்ட வீரர்களுக்கு ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவு பொதிகள் 300 வீரர்களுக்கு வழங்கப்படடது.

குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட உதை பந்தாட்ட லீக்கின் செயலாளர் பி.ஞானராஜ்,மற்றும் மன்னார் மாவட்ட உதை பந்தாட்ட லீக்கின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு உலர் உணவு பொதிகளை வைபவ ரீதியாக வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது. 

-மன்னார் மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட 300 உதைபந்தாட்ட வீரர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு Reviewed by Author on May 26, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.