-மன்னார் மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட 300 உதைபந்தாட்ட வீரர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு
இலங்கை உதை பந்தாட்ட சம்மேளனம் மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட லீக்கிற்கு சுமார் 3 இலட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்திருந்தனர்.
இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் 33 உதைபந்தாட்ட கழகங்களை சேர்ந்த 300 உதைபந்தாட்ட வீரர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
இந்த
நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் மன்னார் நகர சபை
மண்டபத்தில் உலர் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது.
இலங்கை
உதை பந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவரும், மன்னார் மாவட்ட உதை பந்தாட்
லீக்கின் தலைவருமான ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில் குறித்த
நிகழ்வு இடம் பெற்றது.
இதன் போது தெரிவு செய்யப்பட்ட உதைபந்தாட்ட வீரர்களுக்கு ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவு பொதிகள் 300 வீரர்களுக்கு வழங்கப்படடது.
குறித்த
நிகழ்வில் மன்னார் மாவட்ட உதை பந்தாட்ட லீக்கின் செயலாளர்
பி.ஞானராஜ்,மற்றும் மன்னார் மாவட்ட உதை பந்தாட்ட லீக்கின் முக்கியஸ்தர்கள்
கலந்து கொண்டு உலர் உணவு பொதிகளை வைபவ ரீதியாக வழங்கி வைத்தமை
குறிப்பிடத்தக்கது.
-மன்னார் மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட 300 உதைபந்தாட்ட வீரர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு
Reviewed by Author
on
May 26, 2020
Rating:
No comments:
Post a Comment