அண்மைய செய்திகள்

recent
-

முகநுால் விமர்சனங்கள் கண்டு முடிவுகளை நாடாதீர்! முகநுால் பதிவால் இளம் குடும்பஸ்தர் தற்கொலை

யாழ்ப்பாணத்தில் பேஸ்புக்கில் பரப்பப்பட்ட போலியான தகவலினால், குடும்பஸ்தர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

குறித்த குடும்பஸ்தர் யாழ்ப்பாணம் நாவற்குழி பாலத்திற்கு அருகாமையில் உள்ள வெற்றுக் காணியில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

நேற்றுமுன்தினம் வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பாத நிலையில், நேற்று(19) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த இராசதீபன் (29) என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

திருமணமாகி ஒரு குழந்தையின் தந்தையாரான இந்த நபருக்கு, வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக, போலி பேஸ்புக் கணக்கில் பதிவு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து, ஏற்பட்ட மனவிரக்தியில் இந்த தற்கொலை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
முகநுால் விமர்சனங்கள் கண்டு முடிவுகளை நாடாதீர்! முகநுால் பதிவால் இளம் குடும்பஸ்தர் தற்கொலை Reviewed by Admin on May 19, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.