அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்திற்கு வழங்குவதற்கு தற்போது அரசாங்கத்திடம் தீயனைப்பு வாகனம் இல்லை

மன்னார் மாவட்டத்திற்கு உடனடியாக வழங்குவதற்கு தற்போது இலங்கை அரசாங்கத்திடம் எந்த ஒரு தீயணைப்பு வாகனமோ அல்லது தீயணைப்பு படை பிரிவோ இல்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ஸவினால் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ்நிர்மலநாதனிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது

 மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் தீ விபத்துக்கள் தொடர்பாகவும் மன்னாரில் இதுவரை தீயணைப்பு வாகனமோ...கருவிகளோ.... இல்லாமை தொடர்பாக இன்றைய தினம்  பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் அவரது இல்லதில் இடம் பெற்ற முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பின் போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனால் பிரதமரின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.

 குறித்த விடயம் தொடர்பாக உடனடியாக சம்மதப்பட்ட அதிகாரியிடம் தொடர்பு கொண்டு அறிந்து கொண்ட பிரதமர்  தற்போது இலங்கை அரசாங்கத்தின் கையிருப்பில் தீயணைப்பு வாகனம் அல்லது தீயணைப்பு துறை ஏற்பாடு  இல்லாத காரணத்தினால் தற்போது உடனடியாக மன்னார் மாவட்டத்துக்கோ முல்லைத்தீவு மாவட்டத்துக்கோ  தீயணைப்பு வாகனம் வழங்க முடியாத நிலை காணப்படுவதாகவும்

 குறித்த விடயம் தொடர்பாக உடனடியாக கவனம் செலுத்தி கோரோனா அச்சுறுத்தல் நீங்கிய பின்னர்   புதிய தீயணைப்பு கையிருப்பு கிடைக்க பெறும் போது தற்போதைய அரசாங்கத்தின் விசேட செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஸவூடாக உடனடியாக மன்னார் மாவட்டத்திற்கும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு என தனியான அலகை  வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாக உறுதி அளித்ததுடன் அதற்கான நடவடிக்கையை முன்னுரிமை அடிப்படையில் நடைமுறைப்படுத்துமாறும் பசில்ராஜபக்ஸவிடம் பணிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரச்சினை தொடர்பான எழுத்து மூல கோரிக்கையும் பிரதமர் மகிந்த ராஜபக்ஸவிடம் உத்தியோக  பூர்வமாக முன்னால் பாரளுமன்ற உறுப்பினர் சாள்ஸ்நிர்மலநாதனால் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

மன்னார் மாவட்டத்திற்கு வழங்குவதற்கு தற்போது அரசாங்கத்திடம் தீயனைப்பு வாகனம் இல்லை Reviewed by Author on May 04, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.