அண்மைய செய்திகள்

recent
-

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஆட்டோ சாரதி பலி


மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி வேலூர் பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று (15) இரவு இடம்பெற்றுள்ளதுடன் இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்லடி வேலூர் 4ஆம் குறுக்கு வீதியைச் சேர்ந்த ஆட்டோ சாரதியான 29 வயதுடைய இராமசந்திரன் மனோரதன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் சம்பவ தினமான நேற்று இரவு வீட்டில் இருந்துள்ள நிலையில், சுமார் 6.30 மணியளவில் அவருடைய கையடக்க தொலைபேசிக்கு வந்த அழைப்பையடுத்து அழைப்புக்கு பதில் அளித்தவாறு வீட்டின் பகுதிக்குச் சென்றுள்ளார்.

அரை மணித்தியாலயத்தின் பின்னர் ஒரு சத்தம் கேட்டது அதனையடுத்து அங்கு உறவினர்கள் சென்ற போது உயிரிழந்த நிலையில் கிடப்பதைக் கண்டுள்ளடுள்ளனர்.

அண்மையில் இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற சண்டையின் எதிரொலியாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

மட்டு போதனா வைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஆட்டோ சாரதி பலி Reviewed by NEWMANNAR on May 16, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.