மன்னார் நகர சபையின் 28 ஆவது அமர்வில் பல்வேறு விடையங்கள் தொடர்பாக ஆராய்வு........
மன்னார் நகர சபையின் 28 ஆவது அமர்வு இன்று வியாழக்கிழமை
காலை 10.30 மணியளவில் மன்னார் நகர சபையின் சபா மண்டபத்தில் மன்னார் நகர
முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில் இடம் பெற்றது.
இதன்
போது பல்வேறு விடையங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது. வடிகான் அமைப்பு,வீதி
புனரமைப்பு உற்பட பல்வேறு விடையங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.
மேலும்
மன்னார் நகர சபையினால் வழங்கப்பட்ட கடைகள் தொடர்பாக தொடர்ச்சியாக
கிடைக்கபெறும் முறைப்பாடுகளுக்கு அமைவாக சபை உறுப்பினர்கள் பல்வேறு
குற்றச்சாட்டுக்களை சபை அமர்வில் முன்வைத்தனர்.
குறிப்பாக
மன்னார் பஸார் பகுதியில் உடைக்கப்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு பதிலாக
வழங்கப்பட்ட கடைத்தொகுதிகளில் சுமார் 8 கடைகளை மாத்திரமே மன்னாரைச் சேர்ந்த
வர்த்தகர்கள் வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், ஏனைய கடைகளை
வெளி மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் அதனை பெற்று வியாபார நடவடிக்கைகளை
மேற்கொண்டு வருவதாகவும் மன்னார் நகர சபை உறுப்பினர் ஜோசப் தர்மன்
குற்றச்சாட்டை முன் வைத்தார்.
மேலும்
ஒரு சில அதிகாரிகளின் செயற்பாட்டினால் ஒட்டு மொத்தமாக மன்னார் நகர சபைக்கு
அபகீர்த்தியை ஏற்படுத்தி உள்ளதாகவும் அவர் சபையில் தெரிவித்தார்.
எனவே
மன்னார் நகர சபையினால் வழங்கப்படும் வர்த்தக நிலையங்கள் மன்னார்
மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கப்படவேண்டும் என சபையில் பிரேரணைகள்
முன் வைக்கப்பட்டது.
எனினும்
வழங்கப்பட்ட கடைகளில் தென் பகுதியை செர்ந்த பலருக்கு கைமாற்றப்பட்டு
வியாபார நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்றது.எனவே குறித்த நடவடிக்கை
தொடர்பாக நடகர சபை முழுமையாக ஆராயப்பட வேண்டும் என மன்னார் நகர சபை
உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ் சபையில் கோரிக்கை முன் வைத்தார்.
மேலும் மன்னார் பஸார் பகுதியில் பல வருடங்களாக வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்ட பலருக்கு இன்னும் கடைகள் ஒதுக்கி கொடுக்கப்படவில்லை.
இதனால்
இவர்களின் வாழ்வாதாரம் பாதீப்படைந்துள்ளது.எனவே பாதீக்கப்பட்ட மன்னாரை
சேர்ந்த வியாபாரிகளுக்கு கடைகளை அமைத்துக்கொடுக்க நகர சபை நடவடிக்கைளை
முன்னெடுக்க வேண்டும் என நகர சபை உறுப்பினர் உவைசுல் ஹர்னி கோரிக்கை
விடுத்தனர்.
மேலும்
வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த காலங்களை போன்று தற்போதும் வியாபார
நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.ஆனால் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த
தொழில் நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தவர்கள் பலர் இன்று வியாபார
நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத நிலையில் உள்ளனர்.
எனவே
தற்போது வழங்கப்பட்டுள்ள கடைகள் தொடர்பாக நகர சபை உரிய நடவடிக்கைகளை
மேற்கொள்ள வேண்டும் எனவும் கைமாற்றப்பட்ட கடைகள் அனைத்தையும் மன்னார் நகர
சபை மீள் பெற்று மன்னாரை சேர்ந்த கடைகள் இல்லாதவர்களுக் வழங்க வேண்டும் என
மன்னார் நகர சபை உறுப்பினர் மைக்கல் கொலின் கோரிக்கை விடுத்தார்.
நகர
சபை உறுப்பினர்களின் கோரிக்கைகளையும் குற்றச்சாட்டுக்களையும் ஏற்றுக்கொண்ட
நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் மன்னார் நகர சபை
உறுப்பினர்கள் 7 பேர்கள் அடங்கிய விசேட குழு ஒன்றை உடனடியாக நியமித்தார்.
குறித்த
குழுவினர் மன்னார் நகர சபையினால் வழங்கப்பட்ட கடைகள் தொடர்பாக தனித்தனியாக
ஆராய்ந்து குறித்த கடையின் உரிமையாளர் குறித்த கடையை நடத்துகின்றார்
அல்லது பிரிதொரு நபர் நடத்துகின்றாரா என ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க
உத்தரவிட்டார்.
மன்னார் நகர சபையின் 28 ஆவது அமர்வில் பல்வேறு விடையங்கள் தொடர்பாக ஆராய்வு........
Reviewed by Author
on
June 18, 2020
Rating:
No comments:
Post a Comment