அண்மைய செய்திகள்

recent
-

பேரூந்துகளிலும் தொடரூந்துகளிலும் சிறந்த மனநிலையுடன் மக்கள் பயணம் செய்வதற்கான சூழலை ஏற்படுத்தும் பணி ஆரம்பிக்கபடவுள்ளது:

 பேரூந்துகளிலும் தொடரூந்துகளிலும் சிறந்த மனநிலையுடன் மக்கள் பயணம் செய்வதற்கான சூழலை ஏற்படுத்தும் பணி ஆரம்பிக்கபடவுள்ளது:

மிகச் சிறியதோர் ஆரம்பத்திலிருந்து பெரிய மாற்றத்தினை செய்ய முடியும். பஸ் வண்டிகளை கழுவி சுத்தம் செய்து பிரயாணிகள் விருப்பத்துடன் பயணிப்பதற்கான ஒழுங்குகளை மேற்கொள்வது உடனடியாக ஆரம்பிக்கபட உள்ளது.
சுவரொட்டிகளை ஒட்டுவதை நிறுத்துவதற்கு மேற்கொண்ட சிறியதொரு தீர்மானம் நாட்டின் அனைத்து நகரங்களையும் சுத்தமாக வைத்திருப்பதற்கு வழிவகுத்திருப்பதனையும் நான் சுட்டிக்காட்டியதுடன், அதே போல - அனைத்து துறைகளினதும் அபிவிருத்தியை மிகச் சிறிய இடத்திலிருந்து ஆரம்பிக்க முடியுமென்பதனையும் குறிப்பிட்டேன்.
போக்குவரத்து அமைச்சு மற்றும் வாகனங்களை ஒழுங்குபடுத்தல், பேருந்து போக்குவரத்துச் சேவைகள் மற்றும் தொடரூந்துப் பெட்டிகள் மற்றும் மோட்டார் வாகன தொழிற்துறை இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் குறித்து ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இவற்றை நான் தெரிவித்தேன்.
மகிழூந்துகள் (car) மற்றும் தனிப்பட்ட வாகனங்களில் வந்து அதனை நிறுத்திவிட்டு - பேரூந்து மற்றும் தொடரூந்துகளில் பணி இடங்களுக்குச் செல்லும் முறைமையை (Park & ride) விரைவாக நடைமுறைப்படுத்தி வீதி நெரிசலை தீர்க்க வேண்டியதன் அவசியமும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
போக்குவரத்து சபை பேரூந்த சேவையை ஒரு சேவையாக நடத்திச் சென்றாலும் - அதை நட்டம் அடையாத நிறுவனமாக இருக்க வேண்டுமெனவும் இங்கு குறிப்பிடப்பட்டது.
கிராமிய பிரதேசங்களில் பேரூந்த போக்குவரத்து சேவை தொடர்பாக அரச மற்றும் தனியார் துறைகள் கவனம் செலுத்த வேண்டுமென்றும் குறிப்பிடப்பட்டது.
தொடரூந்துகள் மற்றும் பேரூந்துகள் இணைந்த சேவையையும் பேரூந்துகள் இணைந்த சுவையையும் - பயண நேரசூசிப்படி உடனடியாக ஆரம்பியுங்கள். போக்குவரத்து துறையை மேம்படுத்துவதற்காக முதலில் தீர்வுகளை வழங்கக்கூடிய துறைகளை இனங்காண்பது அவசியமாகும். எதிர்வரும் ஐந்து வருடங்களில் போக்குவரத்து சேவையை மேம்படுத்துவதற்கு குறுகிய கால மற்றும் நீண்டகாலத்திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். குறித்த இலக்கு அடையப் பெறுகின்றதா என்பது குறித்து ஆராய்வது மிகவும் முக்கியமானதாகும் என்றும் நான் இதன்போது குறிப்பிட்டேன்.
பொது மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கக்கூடிய வகையில் தொடரூந்துப் பெட்டிகளைப் புதுப்பிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. கொழும்பு கோட்டை மற்றும் மேலும் நான்கு புகையிரத நிலையங்களை மாதிரி நிலையங்களாக விரைவில் புதுப்பிப்பதாக போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.
தொடரூந்துகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் அதிகளவானோர் அவற்றில் பயணம் செய்ய முடியுமென்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
போக்குவரத்து சபைக்கு சொந்தமான பயிற்சி மற்றும் பராமரிப்பு நிறுவனங்களின் சேவையை தனியார் துறையினரும் பெற்றுக்கொள்ளத்தக்கதாக வழங்குவதன் மூலம் - இலாபமீட்டக்கூடிய வழிவகைகள் குறித்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம சுட்டிக்காட்டினார்.
வினைத்திறனான பயணிகள் போக்குவரத்து சேவைக்கு அரச மற்றும் தனியார் துறைகள் முற்கொடுப்பனவுகள் செலுத்தப்பட்ட அட்டை முறைமையை விரைவாக அறிமுகப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தை ஊழல், மோசடிகள் இல்லாத நிறுவனமாக மாற்றுவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
நல்ல நிலையில் உள்ள பொதுப் போக்குவரத்து பேரூந்து வண்டிகளை அதிவேக பாதைகளில் பயணம் செய்வதற்கு அனுமதிப்பதன் மூலம் குறைந்த தொகையில் அதிகளவான பயணிகளுக்கு பயண வசதிகளை வழங்கக்கூடிய வாய்ப்புகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
எனது செயலாளர் பி. பீ. ஜயசுந்தர, நிதி அமைச்சின் செயலாளர் எஸ். ஆர். ஆட்டிகல, போக்குவரத்து அமைச்சின் செயலாளர் என். டி. மொன்டி ரணதுங்க ஆகியோரும் போக்குவரத்து அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் தலைவர்கள், தனியார் பேருந்து சங்க பிரதிநிதிகளும் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

பேரூந்துகளிலும் தொடரூந்துகளிலும் சிறந்த மனநிலையுடன் மக்கள் பயணம் செய்வதற்கான சூழலை ஏற்படுத்தும் பணி ஆரம்பிக்கபடவுள்ளது: Reviewed by Author on August 29, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.