அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் கடலில் கரையொதுங்கிய 700 கிலோ எடையுள்ள அருகிவரும் மீன்

மன்னார் ஆதாம் பாலத்திற்கு உட்பட்ட தேசிய வனப் பூங்கா பகுதியில் பாரிய மீன் சடலமாக கரையொதுங்கியுள்ளதை தொடர்ந்து வனஜீவராசிகள் திணைக்களத்தினர் குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு உடற்கூற்றுபரிசோதனை மேற்கொண்டுள்ளனர்

 தலைமன்னார் ஊர்மனை வன ஜீவராசிகள் திணைக்கள வட்டாரக் காரியாலய பகுதிக்குட்பட்ட நடுக்குடா கடல் வளப் பூங்கா கரையோரப்பகுதியில் குறித்த   கடற்பன்றி என பெயருடைய பாரிய மீன் கரையொதுங்கிருந்தமையை கடற்கரையோர ரோந்துப்பணியில் ஈடுபட்ட கடற்படையினர் அவதானித்து குறித்த பகுதி வன ஜீவராசிகள் தினைக்களத்தினருக்கு தகவல் வழங்கியிருந்தனர்

அதனை தொடர்ந்து  குறித்த தினைக்கள அதிகாரிகள் ஸ்தலத்திற்கு விஜயம் செய்து குறித்த மீனை பார்வையிட்டதுடன் ஆய்வுகளையும் மேற்கொண்டனர்

அதனடிப்படையில் மீனின் ஒருபகுதி உணவுக்காக வேட்டையாடப்பட்டமை  அவதானிக்கப்பட்டுள்ளது இதனையடுத்து நேற்று பகல் குறித்த மீனின் உடற்கூற்றுப்பரிசோதனை வன ஜீவராசிகள் தினக்கள வைத்திய அதிகாரி மற்றும் உத்தியோகத்தர்களினால் முன்னெடுக்கப்பட்டது

குறித்த கடற்பன்றி இனமானது தற்போது அருகிவரும் பாலூட்டி மீன் இனத்தைச் சேர்ந்தது  என்பதுடன் கரையொதுங்கிய கடற்பன்றி 3.3 மீற்றர் நீளமானதும் சுமார் 700 கிலோ கிராம் எடை கொண்டதாகும் 

குறித்த கடற்பன்றியின்உடற்கூற்று பரிசோதனை அறிக்கை கிடைக்க பெற்ற பின்னர் குறித்த அறிக்கையானது மன்னார் நீதவான் நீதி மன்றிற்கு சமர்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது..






 


 

மன்னார் கடலில் கரையொதுங்கிய 700 கிலோ எடையுள்ள அருகிவரும் மீன் Reviewed by Author on August 10, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.