அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற இந்து எழுச்சி மாநாடும், இந்துக் குருமார் பேரவையின் 25 ஆவது ஆண்டு விழாவும்

 மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற இந்து எழுச்சி மாநாடும், இந்துக் குருமார் பேரவையின் 25 ஆவது ஆண்டு விழாவும்.

நந்திக்கொடி ஏந்தியவாறு சிறப்பாக இடம் பெற்ற ஊர்வலம்.

(மன்னார் நிருபர்)

(13-09-2020)

மன்னார் இந்துக் குருமார் பேரவையின் ஏற்பாட்டில் இந்து எழுச்சி மாநாடும், இந்துக் குருமார் பேரவையின் 25 ஆவது ஆண்டு விழாவும் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மன்னார் நகர மணடபத்தில் இடம் பெற்றது.

மன்னார் இந்துக் குருமார் பேரவையின் தலைவர் மனோ ஐங்கர சர்மா தலைமையில் குறித்த நிகழ்வு இடம் பெற்றது.
இதன் போது இன்று ஞாயிற்றுக்கிழமை (13) காலை 9.45 மணியளவில் மன்னார் பிரதான பாலத்தடியில் இருந்து மனன்hர் நகர மண்டபவம் வரை அமைதியான முறையில் ஊர்வலம் இடம் பெற்றது.

குறித்த ஊர்வலத்தில் .இந்து குருமார்கள்,இந்து மக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டிருந்தனர்.இதன் போது நந்திக்கொடியை ஏந்திய வாரு மன்னார் நகர மண்டபம் வரை ஊர்வலமாக வந்தனர்.

அதனைத் தொடர்ந்து மன்னார் நகர மண்டபத்தில் அமைக்கப்பட்ட கலாநிதி மனோகரக் குருக்கள் அரங்கில் நிகழ்வுகள் இடம் பெற்றது.
இதன் போது நடனம் மற்றும் உரைகளும் இடம் பெற்றது.குறித்த நிகழ்வில் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் பிரதம குரு கருனாநந்த குருக்கள், கொழும்பு சிறி பத்திரகாலியம்மன் ஆலய பிரதம குரு குமன் குருக்கள், சிவசேன அமைப்பின் தலைவர் மரவன் புலவு சச்சிதானந்தன்,  உற்பட இந்து மத குருக்கள், அறநெறி பாடசாலை மாணவர்கள்,பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கர் 

















மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற இந்து எழுச்சி மாநாடும், இந்துக் குருமார் பேரவையின் 25 ஆவது ஆண்டு விழாவும் Reviewed by NEWMANNAR on September 13, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.