அண்மைய செய்திகள்

recent
-

தேசிய மர நடுகை வாரத்தையொட்டி மன்னார் மாவட்டச் செயலகத்தில் மரக் கன்றுகள் நாட்டி வைப்பு.

தேசிய மர நடுகை வாரத்தையொட்டி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(20) மன்னார் லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்டத்தில் மர நடுகையை ஊக்கு விக்கும் வகையில் பயண் தரும் 200 மரக்கண்றுகள் வைபவ ரீதியாக மன்னார் மாவட்ட செயலகத்தில் வழங்கி வைக்கப்பட்டது. -மன்னார் லயன்ஸ் கழகத்தின் தலைவர் சாம் ரட்ன ராஜா மன்னார் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் அவர்களிடம் கையளித்தார். 

  அதனைத் தொடர்ந்து மாவட்டச் செயலக உத்தியோகஸ்தர்களிடமும் குறித்த மரக் கண்றுகள் கையளிக்கப்பட்டது. -அதனைத் தொடர்ந்து வழங்கப்பட்ட பயண் தரும் மரக்கண்றுகளில் ஒரு தொகுதி மன்னார் மாவட்டச் செயலக வழாகத்தில் வைபவ ரீதியாக நாட்டப்பட்டது. -குறித்த மரக்கண்றுகளை மன்னார் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள், மன்னார் லயன்ஸ் கழகத்தின் பிரதி நிதிகள் ஆகியோர் வைபவ ரீதியாக நாட்டி வைத்தனர். 

 ஏனைய மரக் கண்றுகள் பிரதேசச் செயலகங்கள் ஊடாக நாட்டி வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
               






தேசிய மர நடுகை வாரத்தையொட்டி மன்னார் மாவட்டச் செயலகத்தில் மரக் கன்றுகள் நாட்டி வைப்பு. Reviewed by Author on October 20, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.