மட்டக்களப்பு கரடியனாறு வைத்தியசாலை கொரோனா சிகிச்சை நிலையமாக தெரிவு
ஏற்கனவே காத்தான்குடி தள வைத்தியசாலை கொரொனா சிகிச்சை நிலையமாக இயங்கிவந்த நிலையில் தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாவது நிலையமாக கரடியனாறு வைத்தியசாலை இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.நேற்று (23.10.2020) நள்ளிரவு வரை 68 வரையான நோயாளிகள் இவ் நிலையத்தில் சிகிச்சையில் உள்ளனர்.
இவர்களில் கம்பகா ஆடைத் தொழிற்சாலை உழியர்களும் பெகளியகொட மீன் சந்தையில் வேலை செய்பவர்களும் அடங்குவர். இவர்களோடு நேரடி தொடர்பை கொண்டிருந்தவர்கள் உடனடியாக தங்களது சுகாதார வைத்திய அதிகாரி அல்லது சுகாதார பரிசோதகரை நாடுமாறு கேட்டுக்கொள்ள படுகிறீர்கள்.
அத்தோடு கிழக்கு மாகாணத்தில் மேலும் 3 வைத்தியசாலைகள் கொறொனா சிகிச்சை நிலையங்களாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது வருகின்றது. அவை பதியத்தலாவ, பாலமுனை மற்றும் ஈச்சிலம்பற்று என்பனவாகும்.
மட்டக்களப்பு கரடியனாறு வைத்தியசாலை கொரோனா சிகிச்சை நிலையமாக தெரிவு
Reviewed by Author
on
October 24, 2020
Rating:
No comments:
Post a Comment