அண்மைய செய்திகள்

recent
-

வாழ்த்து செய்தி

பொறுமை , அடக்கம் , அறிவு , ஆன்மீகம் போன்ற நற்பண்புகள் மனித மனங்களில் குடிகொள்ள வேண்டுமாயின் அஞ்ஞானம் எனும் இருள் அகல வேண்டும் . இந்த இலக்கைஅடையும் வகையில் ஒளி தீபங்களை ஏற்றி உலக வாழ் இந்துக்களால் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த வாழ்த்துச் செய்தியை அணுப்பி வைப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன் ஒளி தரும் தீபங்களால் தீமை எனும் இருள் அகன்று நன்மையெனும் ஒளி எழுவதைப் போல் வாழ்க்கையிலும் ஒளி எழ வேண்டும் என்பதையே இத் தீபாவளி பண்டிகையை குறித்து நிற்கின்றது .

 அத்தோடு ஒருவருக்கொருவர் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்து அன்பை பரிமாறிக் கொள்ளும் ஒரு கலாசார நிகழ்வாக இத் தீபத்திருநாள் உலக மக்களை அன்பினால் இனைக்கின்றது . தீமையை போக்கும் தீபத்திருநாளை மகிழ்ச்சியோடும் அர்த்தபுஷ்டியோடும் கொண்டடும் அதன் மூலம் அன்பையும் நற்பண்புகளையும் வளர்க்க முயற்சிக்கும் நம்மவர்களுக்கும் உலக வாழ் இந்துக்களுக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் ! 
 என்றென்றும் அன்புடன்
 எம் . தீபன் , தலைவர் உமா 
பவுண்டேஷன்

வாழ்த்து செய்தி Reviewed by Author on November 13, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.