ஹொரவப்பொத்தானை- வவுனியா பிரதான வீதியில் விபத்து- பெண் உயிரிழப்பு
திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து வீதியின் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், பின்னால் வந்த டிப்பர் வாகனம் முந்திச் செல்ல முற்பட்டபோது, மோட்டார் சைக்கிளில் சென்ற கணவன் மற்றும் மனைவி டிப்பர் வாகனத்தில் மோதுண்டு பேருந்தின் சில்லுக்குள் சிக்குண்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன்போது, குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் அவரது கணவர் சிறு காயங்கள் ஏற்பட்ட நிலையில் ஹொரவப்பொத்தான பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், உயிரிழந்த பெண்ணின் சடலம் தற்போது ஹொரவப்பொத்தான பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விபத்து தொடர்பாக டிப்பர் வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹொரவப்பொத்தானை- வவுனியா பிரதான வீதியில் விபத்து- பெண் உயிரிழப்பு
Reviewed by Author
on
December 11, 2020
Rating:
No comments:
Post a Comment