அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தில் கடந்த 20 நாட்களில் 100 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்-மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன்.

-மன்னார் மாவட்டத்தில் கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் தற்போது வரை 117 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.

 அவர் மேலும் மன்னாரில் இன்று வியாழக்கிழமை(21) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,,,, மாவட்டத்தில் இந்த மாதம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 20 நாற்களில் மாத்திரம் 100 கொரோனா தொற்றாளர்கள் மன்னார் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

தற்போது வரை 117 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்று (20) புதன் கிழமை கிடைக்கப்பட்ட பீ.சி.ஆர்.பரிசோதனை அறிக்கையின் படி மன்னார் மாவட்டத்தில் 30 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர்.பரிசோதனைகளின் அதிகமாக பரிசோதனைக்கான முடிவுகள் கிடைக்கப் பெற்றுள்ளது.

 எனவே பொது மக்களையும், வியாபார நிலையங்களின் உரிமையாளர்களிடம் நாங்கள் கோரிக்கை ஒன்றை முன் வைக்கின்றோம். பொது மக்கள் தேவையற்ற விடையங்களுக்கு நகர பகுதிகளுக்குள் வருவதையும், தேவையற்ற விதத்தில் வியாபார நிலையங்களில் ஒன்று கூடுவதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

 முக்கியமாக சுகாதார நடைமுறைகளை பின் பற்ற வேண்டும்.முகக்கவசம் அணிதல்,கை சுத்தத்தை கடை பிடித்தல், சமூக இடைவெளியை பேணுதல் மற்றும் சமூக பொறுப்புடன் நடந்து கொள்ளுதல் போன்ற விடையங்களை கடை பிடிக்க வேண்டும். எதிர் வரும் 2 முதல் 4 வாரங்களுக்கு மக்கள் குறித்த விடையங்களை பின் பற்றினால் குறித்த தொற்றில் அடைவை குறைத்து குறித்த தொற்றுச் சங்கிலியை எங்களினால் உடைக்க முடியும். 

 மேலும் இந்த மாதம் ஒரு கொரோனா மரணம் எமது மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. அதிகமானவர்கள் கொரோனா தொற்றுடன் வைத்தியசாலைக்கு வந்து கொரோனா தொற்று கண்டு பிடிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

 எனவே நோயின் தீவிரத்தன்மையை அனைவரும் புறிந்து கொண்டு மிகவும் பொறுப்பு உணர்வுடன் நடந்து கொண்டால் குறித்த நோயின் தாக்கத்தை எம்மால் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும். -மக்கள் தற்போது வரை எங்களுக்கு வழங்கி வரும் ஒத்துழைப்பிற்கு நன்றிகள். ஒத்துழைப்பிற்கு மேலதிகமாக மக்கள் சுய பாதுகாப்பை, சுகாதார வழிமுறைகளை கடை பிடிக்க வேண்டும். என கேட்டுக்கொள்ளுகின்றேன்.
                




மன்னார் மாவட்டத்தில் கடந்த 20 நாட்களில் 100 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்-மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன். Reviewed by Author on January 21, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.