அண்மைய செய்திகள்

recent
-

PHI அதிகாரிகள் மீது எச்சில் துப்பிய நபருக்கு 6 ஆண்டுகள் சிறை

அட்டுலுகம பகுதியில் வைத்து பொது சுகாதார பரிசோதகர்கள் மீது எச்சில் துப்பிய கொரோனா தொற்றாளருக்கு 6 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டணை வழங்கப்பட்டுள்ளது. குறித்த நபருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று வழக்குகளுக்கு தலா இரண்டு ஆண்டுகள் வீதம் இவ்வாறு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

 பானந்துறை நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி குறித்த கொரோனா தொற்றாளரை அழைத்துவர சென்ற பொழுதே அவர் இவ்வாறு பொது சுகாதார பரிசோதகர்கள் மீது எச்சில் துப்பியதோடு, வாகனத்தில் செல்லவும் மறுப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

PHI அதிகாரிகள் மீது எச்சில் துப்பிய நபருக்கு 6 ஆண்டுகள் சிறை Reviewed by Author on January 21, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.