அண்மைய செய்திகள்

recent
-

கடலுக்கு சென்ற மீனவர்கள் இருவரை காணவில்லை

குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி படகில் பயணித்த மீனவர்கள் இருவர் காணாமற்போயுள்ளனர் என்று நெடுந்தீவுப் பொலிஸார் தெரிவித்தனர். அவர்களை தேடி முன்னெடுக்கப்பட்ட பணியில் படகு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

 குறிகாட்டுவானிலிருந்து நேறறு (21) பிற்பகல் 1.45 மணிக்கு நெடுந்தீவுக்கு திரும்பிய மீனவர்களே இருவரே இவ்வாறு காணாமற்போயுள்ளனர். நெடுந்தீவு 6ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த மரியநாயகம் அமலன் மேயன் (வயது-20) நெடுந்தீவு 10ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த றொபின்சன் (வயது-40) ஆகிய இருவருமே காணாமற்போயுள்ளனர். அவர்களை தேடும் பணியை கடற்படையினர் முன்னெடுத்த போது படகு நெடுந்தீவு கரையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடலுக்கு சென்ற மீனவர்கள் இருவரை காணவில்லை Reviewed by Author on February 22, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.