அண்மைய செய்திகள்

recent
-

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் மன்னாரை வந்தடைந்தது

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான தமிழர் பேரணி இன்று சனிக்கிழமை காலை 7.45 ம‌ணி‌க்கு வவுனியா புதிய பேருந்து நிலையத்தின் முன்பு ஆரம்பித்து வவுனியா நகரின் ஊடக ஆரம்பித்து நடைபவனியானது மன்னாரை நோக்கி வந்தடைந்துள்ளது. 9.00 ம‌ணி‌க்கு பண்டார வன்னியன் சிலை அருகே வாகன பேரணியாக புறப்பட்டு 9.15 மணிக்கு பட்டாணிச்சூர் முஸ்லிம் மகா வித்யாலயத்தில் முன்பாக நடைபேரணி நடைபெறும் .

 அடுத்து நெளுக்குளம் 9.45 மணிக்கு அடுத்ததாக 10,30 மணிக்கு புவரசக்குளம் அடுத்ததாக 11.30 மணிக்கு மன்னார் பரையநாளன் குளம் வீதியை வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து 12 மணியளவில் மடுவீதியை வந்தடைந்து தற்போது குறித்த ஊர்வலம் மடுவ சந்தியிலிருந்து முருங்கன் ஊடாக மன்னார் நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.

 குறித்த ஊர்வலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரதிநிதிகள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், சர்வமதத் தலைவர்கள், உள்ளடங்கலாக இளைஞர்களும் , முஸ்லீம் மக்களும் ஊர்வலத்தில் கைகோர்த்துள்ளனர். பலத்த பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டு இருந்த போதும் சோதனைச் சாவடிகளை தகர்த்தெரிந்து குறித்த ஊர்வலம்-மன்னார் நோக்கி சென்று கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
























பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் மன்னாரை வந்தடைந்தது Reviewed by Author on February 06, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.