பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் மன்னாரை வந்தடைந்தது
அடுத்து நெளுக்குளம் 9.45 மணிக்கு அடுத்ததாக 10,30 மணிக்கு புவரசக்குளம் அடுத்ததாக 11.30 மணிக்கு மன்னார் பரையநாளன் குளம் வீதியை வந்தடைந்தது.
அதனைத் தொடர்ந்து 12 மணியளவில் மடுவீதியை வந்தடைந்து தற்போது குறித்த ஊர்வலம் மடுவ சந்தியிலிருந்து முருங்கன் ஊடாக மன்னார் நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.
குறித்த ஊர்வலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரதிநிதிகள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், சர்வமதத் தலைவர்கள், உள்ளடங்கலாக இளைஞர்களும் , முஸ்லீம் மக்களும் ஊர்வலத்தில் கைகோர்த்துள்ளனர்.
பலத்த பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டு இருந்த போதும் சோதனைச் சாவடிகளை தகர்த்தெரிந்து குறித்த ஊர்வலம்-மன்னார் நோக்கி சென்று கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் மன்னாரை வந்தடைந்தது
Reviewed by Author
on
February 06, 2021
Rating:
No comments:
Post a Comment