அண்மைய செய்திகள்

recent
-

இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் முன்பள்ளி மாணவி உட்பட இருவர் காயம்

மட்டக்களப்பு நகரில் இன்று (24) காலை இடம்பெற்ற விபத்தில் முன்பள்ளிக்கு சென்ற மாணவி உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர். மட்டக்களப்பு நகரில் உள்ள மணிக்கூண்டு கோபுரத்திற்கு அருகில் முச்சக்கர வண்டி மீது தனியார் போக்குவரத்து பஸ் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது முச்சக்கர வண்டியை ஓட்டிச்சென்ற தந்தையும் அதில் பயணம் செய்த முன்பள்ளி மாணவியும் படுகாயமடைந்துள்ளனர்.

 படுகாயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டதுடன் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் பஸ்ஸும் பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் முன்பள்ளி மாணவி உட்பட இருவர் காயம் Reviewed by Author on February 24, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.