அண்மைய செய்திகள்

recent
-

முன்பள்ளி ஒன்றில் வாள்வெட்டு தாக்குதல் - ஐவர் பலி.

பிரேஸிலில் தென் பிராந்தியத்திலுள்ள முன்பள்ளி ஒன்றில் 18 வயது இளைஞர் ஒருவர் நடத்திய வாள் வெட்டுத் தாக்குதலில் ஐவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த தாக்குதல் சம்பவம் நேற்று (04) இடம்பெற்றது.உயிரிழந்தவர்களில் 2 வயதுக்கு குறைந்த மூன்று குழந்தைகளும் இரண்டு ஊழியர்களும் அடங்குகின்றனர். 

தாக்குதல்தாரி, ஆயுதத்தால் தன்னை தாக்கிக்கொண்ட நிலையில், வைத்தியசாலையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.இந்த தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.மேலும், சண்டா கேட்டரினா ( Santa Catarina) மாநிலத்தில் மூன்று தினங்களுக்கு துக்கதினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

முன்பள்ளி ஒன்றில் வாள்வெட்டு தாக்குதல் - ஐவர் பலி. Reviewed by Author on May 05, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.