அண்மைய செய்திகள்

recent
-

கடுமையான வீதிக் கட்டுப்பாடுகளுடன் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகர்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் வீதிக் கண்காணிப்பு தடைகள் அமைக்கப்பட்டு பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவின் தேவிபுரம், புதுக்குடியிருப்பு மேற்கு, புதுக்குடியிருப்பு கிழக்கு, மல்லிகைத்தீவு, மந்துவில், கோம்பாவில், உடையார்கட்டு வடக்கு, உடையார்கட்டு தெற்கு, வள்ளிபுனம் ஆகிய 9 கிராம அலுவலர் பிரிவுகளில் அதிக கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதைத் தொடர்ந்தும் முடக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் விடுவிக்கப்பட்ட பகுதிகளிலும் அத்தியாவசிய சேவைகள் மற்றும் அலுவலக ஊழியர்கள் தவிர்ந்த ஏனைய பொதுமக்கள் அடையாள அட்டை நடைமுறைக்கு அமையவே நடமாட அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடுமையான வீதிக் கட்டுப்பாடுகளுடன் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகர்! Reviewed by Author on May 21, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.