அண்மைய செய்திகள்

recent
-

கர்ப்பிணி மனைவியை கிரிக்கெட் மட்டையால் அடித்தே கொலை செய்த இலங்கை அகதியைத் தேடி தமிழக பொலிஸ் வலைவீச்சு!

இந்தியாவில் கர்ப்பிணியான தனது இரண்டாவது மனைவியை அடித்து கொலை செய்ததாகக் கூறப்படும் இலங்கை அகதியை தேடி தமிழக பொலிஸார் வலைவீசி வருகின்றனர். காந்திமா நகரில் கடந்த திங்கட்கிழமை இரவு இலங்கை தமிழ் அகதி ஒருவர் தனது இரண்டாவது மனைவியை கொலை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபரை கைது செய்ய பொலிசார் நான்கு சிறப்பு குழுக்களை அமைத்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. 

 அத்தோடு, ராமேஸ்வரம் ஊடாக அவர் இலங்கைக்கு தப்பிச் செல்வதைத் தடுக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பழைய கட்டடங்களை இடிப்பதில் ஈடுபட்டுள்ள 49 வயதான லாவேந்திரன் என்ற குமார், தனது 32 வயதுடைய மனைவி எல்.கவிதாவை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்ததாக சரவணம் பட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கர்ப்பிணி மனைவியை கிரிக்கெட் மட்டையால் அடித்தே கொலை செய்த இலங்கை அகதியைத் தேடி தமிழக பொலிஸ் வலைவீச்சு! Reviewed by Author on June 23, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.