அண்மைய செய்திகள்

recent
-

யாழ்மாவட்டத்தில் கால் பதித்த “ லக்சுமி கரங்கள் “

தாயக மக்களின் தொண்டு நிறுவனமான “ லக்சுமி கரங்கள் “ தனது மனிதநேய பணிகளை புலம்பெயர்தேசத்தின் உறவுகளின் பங்களிப்புடன் மன்னார், முல்லைத்தீவு,கிளிநொச்சி,வவுனியா,திருகோணமலை,மட்டக்களப்பு,அம்பாறை உட்பட மலையகத்தில் தனது பணிகளை ஆற்றிவந்த “ லக்சுமி “ தாயவள் இன்று யாழ்ப்பாணத்தில் முதல் தடவையாக தனது மனித நேய பணிகளை ஆரம்பித்துள்ளது 

அந்தவகையில் இன்று யாழ். கொழும்புத்துறையில் தற்போதைய இடர்சூழ்நிலையில் நாளாந்த கூலிதொழிலை இழந்த ஐம்பது குடும்பங்களுக்கு ரூபா 1500/- பெறுமதியான உலர்உணவுப் பொருட்களை வழங்கிவைத்தோம் இன்றுடன் “லக்சுமி கரங்கள் “ வடக்கு கிழக்கு மாகானத்தின் எட்டு மாவட்டங்களிலும் தனது பணிகளை ஆற்றிவருகின்றது 

இன்றைய நிகழ்விற்கு லக்சுமி கரங்களின் இலங்கைக்கான பணிப்பாளர் திரு. செ. குலநாயகம் அவர்களும் மன்னார் மாவட்ட லக்சுமி கரங்களின் இணைப்பாளரும் மாவட்ட இழப்பீட்டுக்கான உத்தியோகத்தருமான திரு.ம. சுதாகர் அவர்களும் யாழ்மாவட்ட லக்சுமி கரங்களின் இணைப்பாளர் திருமதி. பிரியா உள்பட யாழ்மாவட்ட லக்சுமி கரங்களின் தொண்டர்களும் கலந்து சிறப்பித்ததுடன் “ லக்சுமி கரங்களின் “ இவ்வாறான மனிதநேய பணிக்கு தொடர்ச்சியாக கரம்பற்றி ஆதரவு தரும் புலம்பெயர் உறவுகள் அனைவருக்கும் நன்றிகள்..






யாழ்மாவட்டத்தில் கால் பதித்த “ லக்சுமி கரங்கள் “ Reviewed by Author on June 26, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.