08 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்
கடந்த மே மாதத்தில் மாத்திரம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுமார் 800 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்,
எனினும் இவர்களில் மூன்றில் ஒரு வீதமானோர் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் எதிர்வரும் நாட்களில் மேல் மாகாணத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் அவர் கூறியுள்ளார்,
நிலவும் சீரற்ற வானிலையால் ஏற்பட்டுள்ள வௌ்ளத்தினால் நீர் தேங்குவதன் காரணமாக எதிர்வரும் ஒரு மாதத்தில் மீண்டும் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயமுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 7,873 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அவர்களில் நால்வர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
08 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்
Reviewed by Author
on
June 06, 2021
Rating:
No comments:
Post a Comment