ரிஷாத் பதியுதீன் கைது தொடர்பில் அமைச்சர் கெஹலிய கூறியது
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (22) நடைபெற்ற போது, ‘ உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ள போதிலும் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் ஏன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படாமல் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கேள்வியெழுப்பிய போதே அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்து சுமார் 3 நாட்கள் கடந்துள்ளன.
இது சட்டரீதியான நிலைமையாகும். மாறாக பலவந்தமாக யாரையும் தடுத்து வைத்திருப்பதில்லை. நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி , நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்ட காரணிகளுக்கமையவே அந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
இது தொடர்பில் எம்மால் அழுத்தம் பிரயோகிக்க முடியாது என்றும், இலங்கையில் சுயாதீன பொலிஸ் , சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் சுயாதீனமான நீதித்துறை காணப்படுகிறது. நீதிமன்ற செயற்பாடுகள் தொடர்பான தீர்மானங்கள் நீதிமன்றத்தினாலேயே எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
ரிஷாத் பதியுதீன் கைது தொடர்பில் அமைச்சர் கெஹலிய கூறியது
Reviewed by Author
on
June 23, 2021
Rating:
No comments:
Post a Comment