அண்மைய செய்திகள்

recent
-

அறுகம் குடா மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற மீனவர்கள் இருவரை காணவில்லை

அம்பாறை – பொத்துவில், அறுகம் குடா மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் காணாமற்போயுள்ளனர். நேற்று முன்தினம் (23) அதிகாலை மீன் பிடிக்கச்சென்ற மீனவர்கள் இதுவரை வீடு திரும்பவில்லை என மீனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர். அறுகம் குடா மீன்பிடித் துறைமுகத்திலிருந்து இயந்திரப் படகில் கடலுக்கு சென்ற இரு மீனவர்களே காணாமல் போயுள்ளனர். 

 பொத்துவில் – களப்புக்கட்டு பகுதியை சேர்ந்த 52 வயதான ஒருவரும் பசறிச்சேனையை சேர்ந்த 32 வயதான ஒருவருமே கடற்றொழிலுக்கு சென்று காணாமற்போயுள்ளனர். மீனவர்கள் காணாமற்போனமை குறித்து பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், மீனவர்களைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அறுகம் குடா மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற மீனவர்கள் இருவரை காணவில்லை Reviewed by Author on June 25, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.