அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவிலும் தாதிய உத்தியோகத்தர்கள் ஒரு மணிநேர கவனயீர்ப்பு போராட்டம்!

அரசாங்க தாதியர் உத்தியோகத்தர்களால் நாடு பூராகவும் ஒரு மணிநேர பணிப்பகிஸ்பரிப்பு போராட்டம் நேற்று(28) இடம்பெற்ற நிலையில்அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் முல்லைத்தீவிலும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் பணிபுரியும் தாதிய உத்தியோகத்தர்களால் வைத்தியசாலை வளாகத்தில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 'தாதிய உத்தியோகத்தர்களிற்கு கொவிட் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கு", "கொரோனா விடுதிகளுக்குரிய வசதிகளை வழங்கு", "தாதிய சேவை பதவி நிலை சேவை என சுற்று நிருபம் வெளியிடு" போன்றதான வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.

முல்லைத்தீவிலும் தாதிய உத்தியோகத்தர்கள் ஒரு மணிநேர கவனயீர்ப்பு போராட்டம்! Reviewed by Author on July 29, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.