இன்று (14) முதல் மாகாணங்களுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட பஸ் சேவை ஆரம்பம்
அவ்வாறு பயணிப்போர் தமது நிறுவன அடையாள அட்டை அல்லது பயணத்தை உறுதிப்படுத்துவதற்கான எழுத்துமூல ஆவணத்தை வைத்திருப்பது கட்டாயமானதாகும் என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆவணங்கள் வீதித் தடைகளில் பரிசோதிக்கப்படவுள்ளன.
குறித்த ஆவணங்களை கொண்டிராதவர்களை திருப்பி அனுப்புவதற்கும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம கூறியுள்ளார்.
இதனிடையே, அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் ஊழியர்களுக்காக இன்று (14) முதல் மேலதிகமாக 14 ரயில்களை சேவையில் ஈடுபடுத்தப்படுத்துவதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இன்று (14) முதல் மாகாணங்களுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட பஸ் சேவை ஆரம்பம்
Reviewed by Author
on
July 14, 2021
Rating:
No comments:
Post a Comment