அண்மைய செய்திகள்

recent
-

வாகன விபத்துக்களில் நேற்று 10 பேர் பலி

நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் ஏற்பட்ட வாகன விபத்துக்களில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதில் 07 பேர் மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார். ஏனைய மூன்று பேரும் பாதசாரிகள் என அவர் தெரிவித்தார். 


 வாகன விபத்துக்களில் அதிகரிப்பை காண முடிவதாக தெரிவித்த அவர், இந்நாட்டு வீதி அமைப்பிற்கு அமைய இது மிகவும் அதிகம் எனவும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சுட்டிக்காட்டினார். கடந்த 2020 ஆம் ஆண்டில் 2,144 பேர் வாகன விபத்துக்களால் உயிரிழந்துள்ள நிலையில், 2019 ஆம் ஆண்டு 2,839 பேர் உயரிழந்துள்ளனர். 2021 ஆம் ஆண்டில் இதுவரை 1,266 பேர் வாகன விபத்துக்களால் உயிரிழந்துள்ள நிலையில், 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
வாகன விபத்துக்களில் நேற்று 10 பேர் பலி Reviewed by Author on July 14, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.