முல்லைத்தீவு மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் எம்.கிருபாசுதன் அவர்கள் பணிப்பாளர் நாயகமாக நியமனம்!
1989இல் சமூக சேவை உத்தியோகத்தராக அரச சேவையில் காலடி எடுத்து வைத்த இவர் திறந்த போட்டிப் பரீட்சை மூலம் 1994இல் இலங்கை திட்டமிடல் சேவையில் இணைந்து கொண்டதையடுத்து உதவித் திட்டமிடல் பணிப்பாளர், நிக்கொட் செயற்திட்ட பணிப்பாளர் போன்றதான பதவிகளை வகித்தார்.
தொடர்ந்து 2011இல் இலங்கை திட்டமிடல் சேவையில் முதல் தரத்தை பெற்றுக்கொண்டதையடுத்து வவுனியா மாவட்ட செயலகத்திற்கு திட்டமிடல் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.
2018இல் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் திட்டமிடல் பணிப்பாளராக கடைமையாற்றிய காலப்பகுதியில் இலங்கை திட்டமிடல் சேவையின் விசேட தரத்தினை பெற்றுக்கொண்டார்.
மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறையில் விஞ்ஞானமானி பட்டத்தை பெற்றுக்கொண்ட எம்.கிருபாசுதன் அவர்கள் கொழும்பு பல்கலைக்கழகத்தில் தேசிய அபிவிருத்தி திட்டமிடல் துறையில் பட்டப்பின் படிப்பினை பூர்த்தி செய்தவராவார்.
மேலும் இந்தியா அபிவிருத்தி கற்கைநெறி, இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளிற்கிடையிலான நட்புறவை வளர்க்கும் செயற்திட்டம், ஆசிய தொழில்நுட்ப நிறுவனத்தினூடாக மூன்று தடவைகள் பயிற்சி கருத்தரங்கு, கொரியா நாட்டில் கொய்க்கா நிறுவனத்தினூடாக தந்திரோபாய அபிவிருத்தி திட்டமிடல் மற்றும் தொழிற்துறை நகரங்களிற்கான சுற்றுலா போன்ற திட்டமிடல் சார்ந்த வெளிநாட்டு விசேட பயிற்சிகளை பெற்றுவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் திங்கட்கிழமை(02.08.2021) விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் பணிப்பாளர் நாயகமாக பதவி உயர்வு பெற்று தனது கடமைகளை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றுக்கொள்ள திரு.எம்.கிருபாசுதன் அவர்களை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர் நலன்புரி சங்கம் ஆகியோர் பாராட்டி நன்றி நவிழ்கின்றனர்.
முல்லைத்தீவு மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் எம்.கிருபாசுதன் அவர்கள் பணிப்பாளர் நாயகமாக நியமனம்!
Reviewed by Author
on
July 31, 2021
Rating:
No comments:
Post a Comment