அண்மைய செய்திகள்

recent
-

தமிழர்கள் தலையில் மிளகாய் அரைக்கும் திராவிடர் கூட்டம்!

தமிழர்கள் என்றால்.....

 "யார் தமிழர்? எந்த Lab ல டெஸ்ட் எடுத்தீங்க"

 "தமிழர்கள் என்று எதற்காக இனத் தூய்மை வாதம் பேசுகிறீர்கள்?" என்று கம்பு சுத்திய பரமார்த்த குருவும் சீடர்களின் கூட்டத்தின் பரமார்த்த குருதான் அண்ணன் சுப.வீ அவர்கள். தமிழர்கள் என்றால் இனவாதம், இனவெறி, இனத் தூய்மை வாதம் என்றீர்களே.... இப்போது, "நாங்கள் திராவிடக் கூட்டம்" என்கிறீர்களே... இது என்ன வாதம் ? இன வாதமா, மொழிவாதமா? அல்லது ஏமாற்று வாதமா? திராவிடம் ஒரு தனி மொழி என்று நீங்கள் முருக்கு சுத்துவீர்கள் என்றால், இந்த நூலை ஏன் தமிழில் எழுதியிருக்கிறீர்கள்? திராவிட மொழியில் அல்லவா எழுதியிருக்க வேண்டும்? ஆக, அப்படி திராவிடம் என்ற பெயரில் ஒரு மொழி இல்லை. 

 அப்படியே, தமிழ்தான் திராவிடம், திராவிடம்தான் தமிழ் என்று அரிசி முருக்கு சுத்துவீர்கள் என்றால், இது "திராவிட மொழித் தூய்மை வாதம்" ஆகாதா? அந்த லிஸ்ட்ல வராதா? சரி, திராவிடம் எனும் இனம் உள்ளதா? உலகளாவிய இன வரையறைக் கோட்பாடுகளின்படி, பகுத்தறிவின்படி பார்த்தால் திராவிட இனம் என்ற ஒன்றும் இல்லை. அப்படியே, திராவிட இனம் உள்ளது என்னும் உங்கள் உருட்டின்படியே கற்பனை செய்து கொண்டால்கூட இது "இனத் தூய்மைவாதம்" ஆகாதா? திராவிடர் கழகம் என்று ஐயா பெரியார் ஈவேரா வைத்த பெயரை, அரசியல் இயக்கம் தொடங்கிய அறிஞர் அண்ணா, "திராவிட" முன்னேற்றக் கழகம் என்று தென்னிந்திய நிலப்பரப்பு அடிப்படையில் பெயர் வைத்தாரே? "ர்" ஐ விட்டுவிட்டாரே?! 

அந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் இன்றைய தலைவர் ஐயா மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களிடமே "நாங்கள் திராவிடக் கூட்டம்" என்ற தலைப்பில் ஒரு நூல் எழுதி அளித்து விபூதி அடிக்கிறீர்களே... இது தூய்மை வாதக் கோட்பாட்டில் வராதா? திருவிடம் என்ற பொருளில் ஐயா அயோத்திதாசப் பண்டிதர் தனித் தமிழில் குறிப்பிட்டதை "த்ராவிட" என்ற சமஸ்கிருதச் சொல் என்று கதையளந்து அயோத்திதாசர் காலத்தில் இருந்தே திராவிடம் எனும் சொல் புழக்கத்தில் இருக்கிறது என்று யுனெஸ்கோ பெரியார் போல ஏமாற்றினீர்களே. 

அதுவும் இந்த நூலில் உள்ளதா? திரிவடுகம் - என்று தெலுங்கு, கன்னடம் பேசிய மூன்று நாடுகளைச் சேர்ந்தவர்களைக் குறிக்கும் சொல் திராவிடம் என்று சமஸ்கிருதத்தில் அழைக்கப்பட்டது என்று ஐயா. சி.பா. ஆதித்தனார் குறிப்பிட்டாரே.... அந்த வகையில் "நீங்கள் திராவிடக் கூட்டமா?" சரஸ்வதி நதிக்கு தெற்கு நோக்கி வந்த பிராமணர்களைக் குறிக்கும் "த்ராவிட பிராமணர்கள்" என்பதில் உள்ள த்ராவிடக் கூட்டமா நீங்கள்? இந்த திராவிட் எனும் சொல்லை சமஸ்கிருதத்தில் இருந்துதான் எடுத்தேன் என்று உங்கள் கூட்டம் அவருக்கே தெரியாமல் தத்தெடுத்த தந்தை இராபர்ட் கால்டுவெல் கூறியிருக்கிறாரே? என்றால் உங்கள் கூட்டத்தின் பெயரே சமஸ்கிருதப் பெயர் ஆயிற்றே. அதாவது "நாங்கள் திராவிட பிராமணர்கள் கூட்டம்" என்றல்லவா உண்மையில் பொருள் வருகிறது. ஐயா, உங்களைப் போல, ஒரு பொய்யை நிதானமாக, மயக்கும் தமிழில் உண்மை போலவே எங்களுக்குப் பேசத் தெரியாது... காரணம் அது எங்கள் பிழைப்பு அல்ல.

 பிழைப்புக்காகத் தமிழ் கற்று எழுதி நயமாகப் பேசி அதில் வாழ்பவர்கள் அல்ல தமிழர்களாகிய நாங்கள். தேர்தலுக்கு முதல்நாள் வரை தமிழ் வாழ்க, தமிழர்கள் நலன் வாழ்க என்று சொல்ல வேண்டியது, தமிழ்த்தாய் சிலைக்கு மாலை அணிவிக்க வேண்டியது..... தமிழர்களின் வாக்குகளை வாங்கி வெற்றி பெற்ற அடுத்த நாளே, "திராவிடம் வெல்க, நாங்கள் திராவிடக் கூட்டம், Belongs to Dravidian Stock" என்று கூறவேண்டியது. உண்மையில் இப்படி ஒரு கூட்டத்தை மானுடம் பார்த்திருக்காது.

 தமிழில் பேசி, எழுதி, வாழ்ந்து கொண்டு "நாங்கள் தமிழர் கூட்டம்" என்று சொல்ல முடியாமல் நாக்கு சுளுக்கிக் கொண்டு நாங்கள் தமிழர்கள் அல்ல "திராவிடர் கூட்டம்" என்று நூல் மூலமாக ஆவணப்படுத்தி உறுதி செய்த தங்களின் பணி தமிழர்களால் பல நூறு ஆண்டுகளுக்குப் போற்றப்பட வேண்டும். காரணம், இவர்கள் தமிழர் கூட்டமல்ல என்று தமிழர்கள் சொல்லும்போது உலகம் நம்பவில்லை. 

இன்று திராவிடக் கூட்டத்தின் பரமார்த்த குரு ஐயா சு.ப.வீ அவர்களே வாக்கு மூலம் அளித்திருக்கிறார், தாங்கள் தமிழர் கூட்டம் அல்ல, திராவிடர் கூட்டம் என்று. இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? 

- வளர்மெய்யறிவான் 


தமிழர்கள் தலையில் மிளகாய் அரைக்கும் திராவிடர் கூட்டம்! Reviewed by Author on July 23, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.