அண்மைய செய்திகள்

recent
-

தெல்லிப்பழை பிரதேச செயலக ஊழியர் கொரோனாவால் பலி

தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். கடந்த ஒரு வாரமாக யாழ். போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று நண்பகல் உயிரிழந்தார் என்று வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.

 அச்சுவேலியைச் சேர்ந்த ராஜா ரமேஸ்குமாரன் (வயது 44) என்ற தெல்லிப்பழை பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோ கத்தரே இவ்வாறு உயிரிழந்தார். கொவிட்-19 நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட அவர், சுயநினைவற்ற நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டபோதும் நேற்று நண்பகல் உயிரிழந்தார். யாழ். மாவட்டத்தில் நேற்றுவரை 124 பேர் கோவிட்-19 நோயினால் உயி ரிழந்துள்ளனர்.

தெல்லிப்பழை பிரதேச செயலக ஊழியர் கொரோனாவால் பலி Reviewed by Author on July 30, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.