கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த 3 அதி சொகுசு பஸ்கள் மடக்கி பிடிப்பு..!
இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை தும்பாலஞ்சோலை இராணுவ முகாம் சோதனைச் சாவடியில் கடமையிலிருந்த இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து இந்த நடவடிக்கையினை மேற்கொண்டனர்.
இந்த பஸ் வண்டிகள் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பிலிருந்து நான்கு மாகாணங்களைக்கடந்து கொழும்பிற்குச்சென்று திரும்பிவரும் வழியில் பாதுகாப்புத் தரப்பினரால் சோதனையிடப்பட்டபோது அவர்களிடம் விசேட அனுமதிப்பத்திரங்கள் மற்றும் பாதை அனுமதியோ இருக்கவில்லையெனத் தெரியவந்துள்ளது.
இந்த பஸ் வண்டிகளின் சாரதிகள் மற்றும் நடாத்துநர்களை நீதவான் முன்னிலையில் ஆஜர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்ட பயணிகள் கரடியனாறு கொவிட் சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த பஸ் வண்டியிலிருந்த ஏனைய பயணிகள் அன்டிஜன் பரிசோதனையினையடுத்து வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
நேற்றய தினம் கொழும்பில் வைத்து சில பேருந்துகளுக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டதுடன் முக்கிய தேவையுடையவர்கள் பிரயாணம் செய்வதற்காகவே பஸ் மட்டக்களப்பில் இருந்து கொழும்பு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த 3 அதி சொகுசு பஸ்கள் மடக்கி பிடிப்பு..!
Reviewed by Author
on
July 02, 2021
Rating:
No comments:
Post a Comment