அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் 2 ஆவது நாளாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுப்பு.

மன்னார் மாவட்டத்தில் வசிக்கும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான கொரோனா தொற்று தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை 2 ஆவது நாளாக இன்று செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிக எண்ணிக்கையான மக்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள ஆர்வம் காட்டியுள்ளனர். மன்னார் ஆடைத் தொழிற்சாலை பிரதான வீதியில் அமைந்துள்ள பொது மண்டபத்தில் தடுப்பூசி 2 ஆவது நாளாகவும் செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

 இதன் போது கிராம அலுவலகர் பிரிவுகள் ஊடாக ஒதுக்கப்பட்ட நேரங்களுக்கு அமைய செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றது. -இதே வேளை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (6) நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் முருங்கன் பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.









மன்னாரில் 2 ஆவது நாளாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுப்பு. Reviewed by Author on July 06, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.