அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையில் 10 வயதுக்குட்பட்ட 19,688 சிறுவர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர் - சுகாதார அமைச்சர்

இலங்கையில் 10 வயதிற்குட்பட்ட 19,688 சிறுவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். 10 மற்றும் 18 வயதிற்கு இடைப்பட்ட 26,143 சிறுவர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். 

அத்துடன் 14 வயதிற்கு கீழ்ப்பட்ட 14 சிறுவர்கள் தொற்றினாள் உயிரிழந்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார். சிறுவர்களுக்கு பைஸர் - BioNTech தடுப்பூசியை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் தற்போது ஆராயப்பட்டு வருவதாகவும், இறுதி முடிவு தொற்று நோய்களுக்கான ஆலோசனைக் குழுவால் எட்டப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கையில் 10 வயதுக்குட்பட்ட 19,688 சிறுவர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர் - சுகாதார அமைச்சர் Reviewed by Author on August 05, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.