அண்மைய செய்திகள்

recent
-

சுகாதார வழிகாட்டல்களை பின்பற்ற தவறிய 11 பஸ் சாரதிகள் கைது

பொது போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்கும் போது சுகாதார வழிகாட்டல்களை கடைபிடிக்கத் தவறும் பஸ் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களை கைது செய்வதற்காக நாடளாவிய ரீதியில் இன்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பில் நேற்று முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் பயணிகள் போக்குவரத்தின் போது சுகாதார வழிகாட்டல்களை பின்பற்ற தவறிய 11 பஸ் ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய 11 பஸ்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பொதுப் போக்குவரத்தை முன்னெடுப்பது தொடர்பான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பஸ் நடத்துபவர்கள் வழிகாட்டல்களைப் புறக்கணிப்பது தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேற்படி தரப்பினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுகாதார வழிகாட்டல்களை பின்பற்ற தவறிய 11 பஸ் சாரதிகள் கைது Reviewed by Author on August 05, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.