நீட் தேர்வு தோல்வி பயம்.. மேலும் ஒரு மாணவி தற்கொலை... தொடரும் சோகம்.!
கடந்த 12-ஆம் தேதி நாடு முழுவதும் மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை எழுவதற்கு முன்பாகவே அச்சத்தின் காரணமாக சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் தனுஷ் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்திலிருந்து மீள்வதற்குள் அரியலூரைச் சேர்ந்த மாணவி கனிமொழி நீட் தேர்வை சரியாக எழுதாத காரணத்தினாலும், தோல்வியடைந்துவிடுவோம் என்ற அச்சத்தாலும் தற்கொலை கொண்டார். நீட் தேர்வால் இவர்களின் மரணமே கடைசியாக இருக்க வேண்டும் என்று அனைவரும் எண்ணிய நிலையில், மேலும் ஒரு மாணவி இன்று நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்டுள்ளது மேலும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
நீட் தேர்வு தோல்வி பயம்.. மேலும் ஒரு மாணவி தற்கொலை... தொடரும் சோகம்.!
Reviewed by Author
on
September 15, 2021
Rating:
No comments:
Post a Comment